/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஜெயேந்திரர்
/
திருப்தியுடன் வாழ பழகுங்கள்
/
திருப்தியுடன் வாழ பழகுங்கள்
ADDED : பிப் 02, 2016 12:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.
* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.
* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.
*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் கொடிய நரகம் வேறு கிடையாது.
*நல்லவர்களின் நட்பினால் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழலாம்.
* இளமை, செல்வம், ஆயுள் இவையெல்லாம் நிலைத்து நிற்பதில்லை. செய்த தர்மத்தின் பயன் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஜெயேந்திரர்